உள்நாட்டு செய்திகள்புதியவை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் மாணிக்கவாசகம் கணேசராஜா உத்தரவிட்டார்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த 6 மீனவர்களை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை(29) குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க