உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் கடும் வறட்சி: நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஒழுங்கான மழை வீழ்ச்சி இன்மையால் பல லட்சம் பெறுமதியான நெல் செய்கைகள் அழிவடைந்திருந்தது.

இந்த நிலையில் வறண்ட கால நிலை நீடித்துவருவதால் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயல் நிலங்கள் சிறு குளங்கள், நீர் வழங்கும் பிரதான குளங்கள் அனைத்தும் நீர் அற்று வரண்டு காணப்படுவதால் நன்னீர் மீன்களும் இறந்த நிலையில் காணப்படுவதுடன் நன்னீர் குளங்களுக்கு குல்லா படகுகளில் பயணிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகம் நீர் கொண்ட கட்டுக்கரை, ஈச்சளவாக்கை, சன்னார் ,கூராய் , பெரியமடு ஆகிய குளங்கள் அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் மீன்பிடியை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.

அதே நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக முதலைகளும் குளங்களுக்குள்ளும் சிறிய அளவு நீர் நிலை காணப்படும் பகுதிகளுக்குள்ளும் நுழைவதால் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக நீரியல் வள திணக்களம் மீன்பிடி அமைச்சு சம்மந்த பட்ட அதிகாரிகள் என பல தரப்பினரிடம் தெரிவித்துள்ள போதும் இதுவரை எந்த வித நிவாரணமோ மானியங்கலோ எங்களுக்கு வழங்கப்படவிலை.

எனவே எங்கள் வாழ்வாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாய மக்களுக்கு வழங்கப்படுவது போன்று தற்காலிக நிவாரண உதவிகளையாவது வழங்கிவைக்குமாறு நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க