உள்நாட்டு செய்திகள்

‘தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்க அழைக்கப்படவில்லை’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விஷேட குழுவில் சாட்சியம் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டால் தாம் அதற்கு தயாராக இருப்பதாக இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

இதுவரையில் தெரிவுக்குழு முன்னிலையில் சமூகமளிக்குமாறு உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், செய்தித்தாள்களிலேயே இந்த விடயத்தையே பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் விசாரணை தொடர்பாக அழைக்கப்படும் பட்சத்தில் இராணுவம் என்ற ரீதியிலும் இராணுவ தளபதி என்ற ரீதியிலும் எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இதில் எந்த வித பிரச்சினைகளும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க