உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டி கொலை!

சம்மாந்துறை -நிந்தவூரில் உள்ள ஒரு வீட்டில் 10 மாத இரட்டையர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டின் குளியலறையிலேயே இரண்டு குழந்தைகளும் வெட்டிக்  கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் 26 வயதுடைய தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான தாய் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க