உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பசுமைப் பூமி வேலைதித்திட்டம்; 500 குடும்பங்களுக்கு காணிகள் கையளிப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு பசுமைப் பூமி (ஹரித பூமி) வேலைத்திட்டத்தின் கீழ் 7 பர்ச்சஸ் காணி வழங்கும் நிகழ்வு கண்டி தெல்தோட்டைப் பிரதேசத்தில்(28.7.2019) நேற்று இடம் பெற்றது.

தெல்தோட்டை, கிரேட்வெளி மற்றும் போபிட்டிய ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு மேற்படி காணிகள் கையளிக்கப்பட்டன.

பெருந்தோட்ட அபிவிருத்தி; கூட்டுத் தாபனத்திற்குறிய மேற்படி காணிகளைக் கையளிக்கும் வைபவத்தில் அரச முதலீட்டு கண்டி அபிவிருத்தி மலைநாட்டு மரபுரிமை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர் வேலுகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான திருமதி சாந்தினி மற்றும் கோன்கஹகே எஸ்.ராஜரட்னம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

தெரிவுசெய்யப்பட்ட காணி உரிமையாளர்களை மேடைக்கு அழைக்கப்பட்டு அமைச்சர் காணி உறுதி பத்திரங்களை கையளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க