உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை நீதித்துறையினறை சந்தித்தார் ஐ.நா அறிக்கையாளர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சுதந்திரம் மற்றும் நீதிக்கான விசேஷ அறிக்கையாளர் இலங்கை நீதித்துறையினரை சந்திக்க முடியாது என தடைவிதிக்கப்பட்டிருந்த போதும் அவர் அவர்களை சந்தித்து இருக்கிறார்.

குறித்த சந்திப்பு தொடர்பான விடயங்களை அவர் வெளியிட மறுத்து இருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்தவர் என்ற அடிப்படையில் தமக்கு இந்த சந்திப்புக்கான வாய்ப்பு வழங்க வேண்டுமென அவர் கோரியிருந்தார்.

அதனடிப்படையில் முன்னதான நாடாளுமன்றம் அதற்கு தடை விதித்திருந்தது.

அவ்வாறு இலங்கை நீதி விவகாரங்களில் ஒரு வெளிநாட்டு அமைப்பு தலையிட முடியாது என்ற அடிப்படையில் என்ற சந்திப்புக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

என்றாலும் வெளிபுற துறை அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தது. அதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம் பெற்றிருக்கின்றது.

என்றாலும் பிரதம நீதியரசர் அதேபோல இனிய இந்த சட்டவாக்காளர்களை சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் [கிளெமென்ட் நயா டேட்டோஷீ] இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

குறித்த சந்திப்பு இலங்கையின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மாத்திரமே அமைந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க