வடக்கு செய்திகள்

பயிற்றுவிப்பாளர்களுக்கு வவுனியாவில் இறுதி கட்ட பயிற்சி

வவுனியாவில் 42 பயிற்றுவிப்பாளர்களிற்கான இறுதி கட்ட பயிற்சி இன்று இடம்பெற்றது.

அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற பயிற்சியாளர்களிற்கான 2 ஆம் கட்ட பயிற்சிகள் இன்று வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையிலும் ஆசிரிய ஆலோசகர் யூட் பரதகுமாரின் ஒழுங்கமைப்பில் கடந்த 9 நாட்களாக இப்பயிற்சி வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இப்பயிற்சி வகுப்பில் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்தை சேர்ந்த 42 பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பயிற்சி வகுப்புக்கான வளவாளர்களாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க