உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கையில் புதிய வாகன பொருத்தம் மையம் திறப்பு!

இலங்கையின் முன்னணி மோட்டார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவின் உற்பத்தி நிறுவனமான மகேந்திரா லிமிட்டட் நிறுவனத்துடன் இலங்கையில் புதிய வாகன பொருத்தம் மையம் ஒன்றை அமைக்கவிருக்கின்றது.

குறித்த மையம் தென்னிலங்கையில் வெலிகம பகுதியில் அமையவிருக்கிறது.

சுமார் ஒரு மாத காலப்பகுதியில் இதன் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி அந்த மையம் உத்தியோகபூர்வமாகத் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த மையத்தில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் உதிரி பாகங்களை கொண்டு இலங்கையில் வாகனங்களை தயாரிக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன .

இந்த மையத்தில் மாதமொன்றுக்கு 5000 வாகனங்கள் வரை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க