உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தொடரூந்தில் மோதி 25 வயதுடைய இளைஞன் பலி

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று அதிகாலை வவுனியாவிலிருந்து சென்ற தொடருந்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தனியார் பேருந்துகள் தரிப்பிடத்தில் பேருந்துகளில் சுத்தம் செய்யும் தொழில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மதுஷான் திலிந்த ஜெயவீர என்ற இளைஞனே இவ்வாறு தொடரூந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3.30மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற தொடருந்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் அல்லது தொடரூந்துக்கடவையில் படுத்துறங்கியிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது சடலம் தொடரூந்துக்கடவைக்கு அருகே காணப்படுகின்றது சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க