உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும்

நாட்டில் நிலவிவரும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்குமென கூறப்பட்டுள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க