உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா புளியங்குளத்தில் தொடரூந்து மோதி யானை பலி

வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் தொடரூந்துடன் மோதுண்டு யானை பலியாகியுள்ளது.

இன்று(20.087.19) நான்கு மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற தபால் தொடரூந்தே குறித்த யானையுடன் மோதுண்டுள்ளது.

இப்பகுதியில் இந்த யானை தினமும் தொடரூந்து கடவையை கடந்து வருவதாக தெரிவிக்கின்ற போதும் குறித்த பகுதியில் யானை தொடர்பான சமிங்சைகள் இல்லாத போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இம்மாதத்தில் தாண்டிக்குளம் பகுதியிலும், மூனாமடு பகுதியிலும் 15க்கு மேற்பட்ட மாடுகளும் தொடரூந்துடன் மோதி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க