உள்நாட்டு செய்திகள்புதியவை

எவன் கார்ட் விவகாரம்: மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எவன்-கார்ட் மிதக்கும் ஆயுதக்க களஞ்சியசாலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவரை ஓகஸ்ட் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி தலைமை நீதவான் ஹர்ஷன கெகுனவெல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, கருணாரத்ன பண்டார மற்றும் முன்னாள் ‘ரக்னா லங்கா’ தலைவர் விக்டர் சமரவீர ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது நேற்று (ஜூலை 18) கைது செய்யப்பட்ட தேசிய காவல்துறை ஆணையத்தின், செயலாளர் சமன் திசானநாயக்க  குறித்து குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந்நிலையில் அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க