உள்நாட்டு செய்திகள்புதியவை

சர்வதேச கடலில் தவிக்கும் படகுகள்: மீட்க நடவடிக்கை

சீரற்ற வானிலை காரணமாக சர்வதேச கடலில் சிக்கியுள்ள இலங்கையின் பல நாள் மீன்பிடிப் பயணிகளை பாதுகாப்பாக அருகிலுள்ள நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

20மீன்பிடி இழுவைப்படகுகள் இலங்கை கடற்கரையை அடைய முடியாது நேற்று முதல் மாலைதீவு மற்றும் இந்தியா அருகே சிக்கியுள்ளன.

இந்நிலையில் குறித்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த படகுகளை தற்காலிகமாக அருகிலுள்ள நாட்டிற்கு திருப்புவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் திலீப் வேதராச்சி குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க