உள்நாட்டு செய்திகள்புதியவை

கடற்றொழிலாளர்களை உடனடியாக திரும்புமாறு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு கடற் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற கடற்றொழிலாளர்களை உடனடியாக திரும்புமாறு கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கடற் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கடற் பயணம் மேற்கொள்வோர் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 2019 ஜுலை 20 ஆம் திகதி வரை கடும் காற்றுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க