உள்நாட்டு செய்திகள்புதியவை

குருநாகல் நீதவானுக்கு எதிராக இளம் ஊடகவியலாளர் சங்கம் முறைப்பாடு

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபியின் வழக்கு தொடர்பில் குருநாகல் நீதவானின் நடவடிக்கைகள் மீது முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் சுயாதீன நீதி சேவை ஆணைக்குழுவிடம் என்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பெண்ணியல் நோய் தொடர்பிலான பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் என்பதுடன்,

அவருக்கு எதிராக விசாரிக்க உத்தரவிட்ட குருநாகல் பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஆகியோரின் மனைவிமாரும் குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர்கள் என குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க