உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் பாரிய தீ

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வவுனியா அரசாங்க விதை உற்பத்தப் பண்ணையில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும் குறித்த விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும் வயல் நிலங்களிலே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வயல் நிலங்கள் தீக்கிரையாகியதாக குறிப்பிடப்படுகின்றது
தீப் பரவலில் ஏற்பட்ட புகையின் காரணமாக ஏ9 வீதியில் சிறிதுநேரம் பயணத்தடை ஏற்பட்டது.
சிறுபோக அறுவடையின் பின்னரான காலப்பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டதனால் பாரிய அழிவுகள் தவிர்க்கபபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேனை சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தீயணைப்பு பிரிவினர் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கருத்து தெரிவிக்க