உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் கைது

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுத்துறையினரால் அவர் ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

“எவென்காட்” கப்பல் ஆயுத மோசடி வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த அவரை கைதுசெய்யுமாறு நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் அவர் கடந்த வாரம் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த வழக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட பலர் பிரதிவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க