உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சட்டவிரோதமாக வைத்திருந்த 1018 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மீட்பு

மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1018.9 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த உலர்ந்த கடல் அட்டைகளை எருக்கலம்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே  கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 1018.9 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டதோடு, வீட்டு உரிமையாளரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அனுமதித்த அளவை மீறி, அதிக அளவு கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உலர்ந்த கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம், கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க