உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை பயங்கரவாத தாக்குதல் – சந்தேக நபர்கள் இந்தியாவில் கைது

பல்வேறு தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, இந்திய பாதுகாப்புத் தரப்பினர் அங்குள்ள பல பகுதிகளிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணைகளில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு நேரடி தொடர்பு இருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கேரளாவில் நடத்திய சோதனையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

மேலும், டெல்லியில் 14 பேரை இந்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க