உள்நாட்டு செய்திகள்புதியவை

காவல் அதிகார் மீது தாக்குதல்: பெரமுன உறுப்பினருக்கு விளக்கமறியல்

யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதி காவல் துறை அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக எதிர்வரும் ஜூலை 24 வரை விலம்மாறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுனவை (எஸ்.எல்.பி.பி) பிரதிநிதித்துவப்படுத்தும் துசித வலகெதர, குறித்த காவல்துறை அதிகாரியை போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டபோது தாக்கியதாக கூறப்படுகிறது.

எனினும் காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்டதாகக் கூறி சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் விசாரணை நடத்திய பின்னர் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க கண்டி மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க