சினிமா

மீண்டும் இணைந்த ஆஸ்கர் நாயகனும் உலக நாயகனும்

தெனாலி படத்திற்கு பின்னர் அதாவது பத்தொன்பது ஆண்டுகள் கழித்து “தலைவன் இருக்கின்றான்” என்ற புதிய படத்திற்காக மீண்டும் கூட்டணி சேருகின்றனர் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். இப்படத்தினை லைகா  நிறுவனம் மற்றும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் கூட்டணியில் உருவாக இருக்கிறது. இதனை ஏ. ஆர். ரஹ்மான் தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘2000ம் ஆண்டிற்கு பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவுளளதாக குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பிக்பாஸ் சீசன் 3க்கு பின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க