உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ரஞ்சனிடமிருந்து விளக்க கடிதம் கோரும் பிரதமர்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விடமிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கம் கடிதம் ஒன்றை கோரியிருக்கின்றார்.

ரஞ்சன் ராமநாயக்க பௌத்த பிக்குகள் தொடர்பாக வெளியிட்ட ஒரு கருத்து தொடர்பிலேயே இந்த விளக்க கடிதம் கோரப்பட்டிருக்கின்றது.

இந்த விளக்க கடிதம் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பப்பட வேண்டும் என பிரதம மந்திரி ரஞ்சன் ராமநாயக்க விடம் கோரியிருக்கின்றார்.

பௌத்த பிக்குகள், தலைமை பிக்குகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்ற என்ற கருத்தை கூறும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்து உண்மையில் பௌத்த பிக்குகளை அவமானம் செய்யும் ஒரு கருத்தாக உள்ளதாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே பிரதமர் ரஞ்சன் ராமநாயக்க விடம் இதற்கான விளக்கத்தை கோரியிருக்கின்றார்

கருத்து தெரிவிக்க