உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஸ்கந்தவரோதய கல்லூரியில் அடிக்கல் நாட்டி வைப்பு – பிரதமர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் கட்சிஉறுப்பினர்கள் உட்பட பல தரப்பினர்களையும் சந்தித்துக்கலந்துரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சின்னமாகப் ஸ்கந்வராதோய பாடசாலையின் 25 ஆவதுஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

இதன் போது பாடசாலையில் 5.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாகஅமைக்கப்பட்டுள்ள பொது நோக்கு மண்டபத்திற்கு அடிக்கல்லையும் நாட்டிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழா பரிசளிப்புநிகழ்விலும்  விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராச,தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள்மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க