உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அடையாளந்தெரியாதோர் அறுத்து சென்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா- தாண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள வயோதிப பெண் தனது வீட்டிலிருந்து அப்பகுதியிலுள்ள ஐயனார் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நிலை குலைந்த பெண் செய்வதறியாது கூக்குரலிட அவ்விடத்தில் இளைஞர்கள் ஒன்று கூடியதையடுத்து தங்கச்சங்கிலியை அவ்விடத்தில் போட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

அறுக்கப்பட்ட தங்கசங்கிலி இரண்டு பவுண் மதிப்பிலானது என்று கூறப்படுகின்றது.

குறித்த நபர்களை பிடிப்பதற்கு , அப்பகுதியிலுள்ள சிசிரீவி கமராவின் உதவியுடன் பொலிஸார் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க