உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தொடர்ந்து பாதிக்கப்படும் மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள்

 
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளிமுனை கிராம மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பாதீப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதும்,பொறுப்புள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் பாராமுகமாக செயற்படுவதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
அதிக சனத்தொகை கொண்ட கிராமங்களில் பள்ளிமுனை மீனவக் கிராமமும் ஒன்றாகும். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடி தொழிலையே வாழ்வாதர தொழிலாக கொண்டு வாழ்கின்றனர்.
 
குறித்த கிராமத்தை சேர்ந்த மக்கள் 100 வருடங்களுக்கு மேலாக பள்ளிமுனை கடற்பகுதியில் கடற்தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆல்கடல் மீன்பிடி , தூண்டில் தொழில், அட்டை, நண்டு, இறால், கணவா ஆகிய கடல் உணவுகளை பிடிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கடந்த சில வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டதினால் கடலுக்கான நீர் வறத்து குறைவாக காணப்படுகின்றது.
 
அது மாத்திரம் இன்றி காலை நேரங்கலில் கடலில் நீர் அற்றும் காணப்படுகின்றது.
 
இதனால் தாங்கள் தொடர்சியாக மீன் பிடி தொழில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும், படகுகள் மீன்பிடி உபகரணங்களை கடல் பகுதிக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
கடற்கரையூடாக கடலுடன் இணைக்கும் பிரதான வள்ள ஓடு பாதையானது நீர் அற்று காணப்படுவதினால் படகுகளை கடற்கரையில்   இருந்து கடலுக்கு கொண்டு செல்வது பெரும் சிரமமாக காணப்படுகிறதாக மீனவர்கள் தெரிவிக்கின்ரனர்.
 
சில நேரங்களில் கட்டாயம் வாழ்வாதாரத்திற்காக தொழில் ஈடு பட வேண்டும் என்பதற்காக படகுகளை ஏனைய மீனவர்களுடன் பல கிலோமீற்றர் தூக்கிச்செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள்; தெரிவிக்கின்றனர்.
 
இதனால் தாங்கள் தொடர்சியாக ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் கடலில் பிடிக்கும் மீன்களை கரைக்கு படகு மூலமாக கொண்டு வர முடியாமையினால் தொழிலில் கிடைக்கப்பெற்ற கடல் உணவுகளை சுமார் 3 கிலோமீற்றருக்கு மேல் தோலில் சுமந்து கரையை அடைய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
குறித்த பிரச்சினை தொடர்பாக பல முறை பொறுப்புள்ள அரச அதிகாரிகள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் பல முறை பிரதேச மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைவரது கவனத்திற்கும் கொண்டு வந்த போதிலும் இது வரை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் வெகு விரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த படகு பாதையை சீரமைத்து தருமாறு அதே நேரத்தில் படாகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்துவதற்கான இறங்குதுறை ஒன்றையும் அமைத்து தருமாறு  குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
அதே நேரத்தில் குறித்த கடல் பகுதியில் கடற்படையினர் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் அவர்களுடைய படகுகளை கூட கடற்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ மன்னார் நிருபர் ]

கருத்து தெரிவிக்க