உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது

கொட்டாஞ்சேனை – சங்கமித்ர சந்தியில் ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 151 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.

காவற்துறை அதிரடி படையினர் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் காவற்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க