உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பெலியத்த பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

பெலியத்த-மொரகஹஹேன சந்தியின் அருகாமையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.35 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து காயம் அடைந்த 27 வயதுடைய நபர், பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலம் தொடர்பான தகராரில் மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் காயமடைந்த நபர் பெலியத்த பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க