உள்நாட்டு செய்திகள்புதியவை

இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

இங்கிலாந்துக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (ஜூலை 13) நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

கட்டார் ஏர்வேஸ் விமானம் கியூஆர் -664 ன் மூலம் காலை 10 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  அவர் வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜூலை 9 அன்று இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார்.

கருத்து தெரிவிக்க