உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தாவலுக்கு தயாராகும் சு.க. உறுப்பினர்கள்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் என நம்பகரமான தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.

இவர்களில் சிலருக்கு மாவட்ட இணைத்தலைமை பதவி வழங்கப்படவுள்ளதுடன், பொதுத்தேர்தலின்போது ஐ.தே.கவின் பட்டியலில் இடம் ஒதுக்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
இதன்காரணமாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்பொது சுதந்திரக்கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
சு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேக கமகே ஆகியோர் ஏற்கனவே ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க