உள்நாட்டு செய்திகள்புதியவை

போலி ஆவணம் மூலம் மோசடி: ஹட்டனில் ஒருவர் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இன்று (ஜூலை 12) ஹட்டனில் கைது செய்யப்பட்டார்.

குறித்த மோசடியில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்த நிலையில் விசாரணை தொடங்கப்பட்டது.இந்நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வேலை வழங்குவதாக பொய்யாக தெரிவித்து பண மோசடி செய்துள்ளார் என ஹட்டன் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் ஹட்டன் பஸ் டிப்போவில் இணைக்கப்பட்ட முன்னாள் ஊழியர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க