உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பண மோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது

இருபது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில்  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்..

சந்தேக நபர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் நரம்மல பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் 52 வயதுடையவர் எனவும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க