உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவு: குளவிக்கொட்டுக்கு இலக்காகிய ஜந்து பேர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஜந்து பேர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

இன்று மதியவேளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாக கட்டடத்தின் முன்பக்கத்தில் உள்ள இரண்டு குளவி கூடுகள் இருந்தன.

அதில் ஒன்று கலைந்து அங்கு சென்ற மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர் மீது கொட்டியுள்ளன.  இதனால் அதில் நின்ற மக்கள் கலைந்து சென்று பாதுகாப்பாக கட்டங்களுக்குள் புகுந்துகொண்டுள்ளார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக பிரதேச செயல ஊர்தியில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஏற்றி செல்லப்பட்டு அங்கு ஜவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

குளவிக்கொட்டிற்கு அரச உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஒருவர் உள்ளிட்ட ஜந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

கருத்து தெரிவிக்க