உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தொடரூந்தில் மோதுண்ட இளைஞன் உயிரிழப்பு

வவுனியா புதூர் பகுதியில் நேற்று மாலை பாதுகாப்பற்ற தொடரூந்து கடவையினூடாக செல்ல முற்பட்டு தொடரூந்தில் மோதுண்டு இளைஞர் உயிரிழந்துள்ளார் .

புதூர் பகுதியில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த போது தொடரூந்து வருவதை அவதானிக்காத நிலையில் பாதுகாப்பற்ற தொடரூந்து கடவையினூடாக உந்துருளியில் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது தொடரூந்தில் மோதுண்ட புதூரை சேர்ந்த 19 வயதான இலகநாதன் நர்மதன் படுகாயமடைந்த நிலையில் வவுனுயா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணமடைதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க