உள்நாட்டு செய்திகள்புதியவை

’60 பில்லியன் ரூபாயில் பாரிய வீதி திட்டங்கள்’

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ரூ .60 பில்லியனின் கூடுதல் ஒதுக்கீடு மூன்று பெரிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் நிஹால் சூரியராச்சி தெரிவித்தார்.

இந்த திட்டங்களில் கொழும்புக்கு வெளியே உள்ள அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் மற்றும் வடக்கில் வீதி கட்டுமான திட்டம் ஆகியவை அடங்குகிறது.

எந்தவித இடையூறும் இன்றி அடுத்த ஆறுமாதங்கள் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கு குறித்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என அதிகாரசபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க