உள்நாட்டு செய்திகள்

‘கைவிரித்தது சு.க.! லண்டனுக்கு பறந்த தகவல்’

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்றிரவு (11) கூடியது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் கூட்டு எதிரணியுடனான அரசியல் கூட்டணி உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து, அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்,  நாடாளுமன்றக் குழுவின் தீர்மானம் தொடர்பில் தொலைபேசி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க