உள்நாட்டு செய்திகள்புதியவை

ருஹுனை பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுகிறது!

ருஹுனை பல்கலைக்கழகம் இன்று மாலை 4 மணி முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

இதற்கிடையில், பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இன்று காலை முதல் பாதுகாப்பும் கடுமையாக்கப்பட்டது.

குறித்த தாக்குதலில் 12 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் தற்போது மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க