உள்நாட்டு செய்திகள்புதியவை

போதைப்பொருள் உற்பத்தி ஆய்வகம்:70 வயது நபர் கைது

களனியில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி ஆய்வகத்தை நடத்திய 70 வயது நபர் நேற்று (ஜூலை 9) கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்களுடன் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய சோதனையின் போது இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது ஏராளமான டிராமடோல் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன, என உணவு மற்றும் மருந்து ஆய்வாளர் டி.ஆர்.டபிள்யூ. பண்டார கூறியுள்ளார்.

போலி பொதிகளின் மூலம் காலாவதியான மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க