உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தனக்கு மகிழ்ச்சி

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அக்கட்சிக்குள் நெருக்கடி நிலை உருவாகி இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலுக்கு வருவது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க