உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீா்ப்பு போராட்டம்

யாழ்.மாநகரசபையினால் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறுகோாி முஸ்லிம் மக்கள் இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா்.

5G தொழிநுட்பத்துடன் கூடிய Smart Pols கம்பங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து நாட்டில் சில போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு ஐந்துசந்தி பகுதியில் கூடிய முஸ்லிம் மக்கள் “உயிா்கொல்லி” கம்பங்கள் வேண்டாம் என கோாி கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின் விளக்குகளை பொருத்துவதற்காகவே கம்பங்களை நாட்டுகின்றோம் என பொய்கூறி கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுவதாக யாழ் மாநகர சபை மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்களை கொல்லும் உயிா்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை. அதனை அகற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மாநகர சபைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் தங்கியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க