உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டில் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இன்று 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிமுதல் இரவு 8 மணிவரையான காலப்பகுதியில், வாத்துவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஹோகாந்தர பகுதியில் நாளை (10) காலை 9 மணிமுதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க