உள்நாட்டு செய்திகள்புதியவை

விசா முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கி இருந்தோர் கைது

விசா முடிவடைந்த நிலையில் அதிக காலம் தங்கியிருந்த பதினான்கு இந்தியர்கள் இன்று குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் உள்ள 12 இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாக்களில் வந்து அலுத்கமவில் உள்ள ஒரு விடுதியில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

குழுவில் இருந்து மேலும் இரண்டு நபர்கள் குடியுரிமை விசாக்களைப் பயன்படுத்தி நாட்டில் தங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மிரிஹான தடுப்பு மையத்தில் வைத்தது விசாரிக்கப்படுகிறார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க