உள்நாட்டு செய்திகள்புதியவை

இராணுவ முன்னாள் கோப்ரலுக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஷவை ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (ஜூலை 8) இந்த உத்தரவை பிறப்பித்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட ஊடகவியலாளரின் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகள் ராஜபக்ஷவின் கைரேகைகளுடன் ஒத்து போவதாக கண்டறியப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நிலையில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மருதானையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்தார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் தென்னகோன் 23 ஜனவரி 2009 அன்று இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது அவரது மனைவியும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க