உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திடீர் இடமாற்றம்

மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திடீர் என மன்னார் வலயக்கல்வி பணிமையினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி இன்று காலை 7 மணி தொடக்கம் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தங்களிடம் எந்த ஒரு கருத்துக்களையும் கேட்காது இடம் மாற்றம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த இடம் மாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யும் வரை பாடசாலை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் இன்றைய தினம் பாடாசாலை பொறுப்புக்களை ஒப்படைத்து மாற்றம் பெற்று செல்ல வருகை தந்த அதிபரையும் குறித்த பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதனின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.

இதே வேளை மன்னார் நகர சபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் குறித்த இடம் மாற்றம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பாடசாலை நலன் புரிசங்கத்தினருடன் கலந்து பேசி ஆலோசனைகள் பெற்ற பின் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வலயகல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிபரை மீள நியமிக்கும் வரை தங்கள் போரட்டத்தை கைவிடபோவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க