உள்நாட்டு செய்திகள்புதியவை

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்

பருத்தித்துறை, திக்கம் பகுதியில் 145 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதோடு அதனை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி, பருத்தித்துறை, திக்கம் பகுதியில் வைத்து குறித்த நபர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் உடுகம சூரிய தலைமையிலான பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பொதி ஒன்றுடன் சென்ற நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதன் போது கஞ்சா மீட்கப்பட்டதுடன், 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மற்றுமொருவர் தப்பி ஓடிய நிலையில் அவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க