உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சுற்றுலா சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேரூந்து கண்டி வீதி கல்குனாமடுப்பகுதியில் இன்று அதிகாலை 12.30மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேரூந்து வீதியைவிட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியதாலே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சொகுசு பேரூந்துல் பயணித்த பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க