சினிமா

“கார்த்திக் டயல் செய்த எண்ணை தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ்காக ஆந்தலாஜி”

“கார்த்திக் டயல் செய்த எண்” எனும் குறும்படம் மூலமாக மீண்டும் வைரலாகியிருக்கிறது சிம்பு – திரிஷா – கெளதம்மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. சமூக வலைத்தளங்களில் இந்தக் கூட்டணியின் குறும்படத்திற்கு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் பாராட்டுக்களும் அதிகமாகவே குவிந்துள்ளது.
இதைப்பற்றி கௌதம் மேனன் கூறுகையில் “கார்த்திக் டயல் செய்த எண்” நல்லபடியா முடிந்தது எனவும், அடுத்து நெட்ஃபிளிக்ஸ்காக உருவாக்கப்படும் ஆந்தலாஜி படத்தின்  தயா‌ரிப்பு வேலைகள்  பிஸியா நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் . முழுக்க முழுக்க ரிமோட்டில் வேலை செய்வது சற்று கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தான் உட்பட  வெற்றிமாறன், சுதா கோங்ரா  மற்றும் விக்னேஷ் சிவன் என நால்வரும் தனித்தனியா அரை மணி நேரப் படமாக எடுத்திருப்பதாகவும் அந்தப் படத்துக்கான வேலைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க