சினிமா

மறைந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன்!

இந்தியாவில் தனது 5வது வயதில் முடுசூட்டிக் கொண்ட இறுதி மன்னர் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி  நேற்றைய தினம் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் வயது முதிர்வு காரணமாக தனது 89 வது வயதில் இறையடி சேர்ந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வதாகவும் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க