உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மொனராகலைக்கான அபிவிருத்திப் பணிகள் வெற்றிகரமாக இன்றுடன் நிறைவு

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்ட வேலைத்திட்டத்தின் கீழ், 11 பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் நன்மை அடைந்துள்ளனர்.

குறித்த திட்டத்தில் 93 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் நன்மை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நான்கு கோடியே 25 லட்சம் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு, சுற்றாடல் பாதுகாப்பு, முதியோரை ஊக்குவித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க