உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வறட்சி காலநிலை- நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

வறட்சி காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மாவட்ட செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய வறட்சி காலநிலை காரணமாக பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க