உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இந்த அரசாங்கத்தில் ஊடகங்கள் சுதந்திரமாக உள்ளன

கடந்த அரசாங்கத்தை விடவும் தற்போதைய அரசாங்கத்தினால் அதிகமான ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இலங்கை பத்திரிகைத்துறைச் சங்கத்தின் 30 வருட நிறைவையொட்டி நேற்று ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

எந்தவித அச்சுறுத்தல்களும் இன்றி ஊடகத்துறையை கொண்டு செல்ல நாம் அரசாங்கம் என்ற வகையில் செயற்பட்டு வருகின்றோம்.

மேலும், கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள், தாக்குதல்கள், வெள்ளை வேன், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் என்பன கடந்த நான்கு வருட காலத்தில் இலங்கையில் இடம்பெறவில்லை.

நாம் அதனையிட்டு அரசாங்கம் என்ற வகையில் சந்தோசப்படுகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க